குன்னூரில் தடையை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்!

நீலகிரி: குன்னூரில் தடையை மீறி மூன்று இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி: குன்னூரில் தடையை மீறி மூன்று இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வைக்க வேண்டியதும் அவசியமாகும். இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வந்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. 

இதையடுத்து, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குன்னூரில், ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், ராஜாஜிநகர் சுற்றுப்புற பகுதிகள் 'சீல்' வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆணையர் பாலு மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் மால் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன், நகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓட்டுப்பட்டறை, ஸ்டான்லி பார்க் பகுதிகளில், 57 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்து, குப்பை லாரியில் ஏற்றப்பட்டது. மேலும், காந்திபுரம் அருகே இந்திரா நகரில், 15 கிலோ வீட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து சுகாதார ஆய்வாளர் மால்முருகன் கூறுகையில், ''வரும், 14ம் தேதி வரை எந்த இறைச்சியும் விற்க கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் வைத்து கோழி இறைச்சி விற்பனை செய்வது தெரியவந்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...