கோவை: கோவையில் மது கிடைக்காத விரக்தியில் கிருமி நாசினியை குடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் மது கிடைக்காத விரக்தியில் கிருமி நாசினியை குடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட்களைத் தவிர்த்து மற்ற பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுபான கடைகள் அடைக்கப்பட்டதால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும், கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுவை வாங்கி குடிக்கின்றனர். தடை மீறி விற்பனை செய்பவர்களிடம் இருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது.
சூலூர் தாலுக்கா அலுவலக வீதியை சேர்ந்தவர் பெர்னார்ட். இவருக்கு ஏஞ்சல் சாண்டினி(14), ஜெயஷாலினி(12), ஜெனிலியாமேரி(6) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 13 வருடங்களாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு கம்பெனி சார்பில் கிருமி நாசினி (சானிடைசர்) கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கிருமி நாசினியை (சானிடைசர்) வீட்டிற்கு கொண்டு வந்த பெர்னார்ட், அதில் தண்ணீர் கலந்து கடந்த இரண்டு நாட்களாக குடித்து வந்துள்ளார். நேற்று சானிடைசரை குடித்து உறங்கியவர் வாந்தி எடுத்துள்ளார்.
இதனை கண்ட அவரது மனைவி பிரியா அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வரும் வழியிலேயே பெர்னார்ட் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, பிரியா அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபழக்கத்தின் காரணமாக மது கிடைக்காமல் சானிடைசரை குடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட்களைத் தவிர்த்து மற்ற பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுபான கடைகள் அடைக்கப்பட்டதால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும், கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுவை வாங்கி குடிக்கின்றனர். தடை மீறி விற்பனை செய்பவர்களிடம் இருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது.
சூலூர் தாலுக்கா அலுவலக வீதியை சேர்ந்தவர் பெர்னார்ட். இவருக்கு ஏஞ்சல் சாண்டினி(14), ஜெயஷாலினி(12), ஜெனிலியாமேரி(6) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 13 வருடங்களாக திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு கம்பெனி சார்பில் கிருமி நாசினி (சானிடைசர்) கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கிருமி நாசினியை (சானிடைசர்) வீட்டிற்கு கொண்டு வந்த பெர்னார்ட், அதில் தண்ணீர் கலந்து கடந்த இரண்டு நாட்களாக குடித்து வந்துள்ளார். நேற்று சானிடைசரை குடித்து உறங்கியவர் வாந்தி எடுத்துள்ளார்.
இதனை கண்ட அவரது மனைவி பிரியா அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வரும் வழியிலேயே பெர்னார்ட் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, பிரியா அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபழக்கத்தின் காரணமாக மது கிடைக்காமல் சானிடைசரை குடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.