கோவை: காரமடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் தி.மு.க சார்பில் கிருமிநாசினி, முக கவசம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவை: காரமடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் தி.மு.க சார்பில் கிருமிநாசினி, முக கவசம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இருப்பினும் சுகாரதார பணியினை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பது துப்புரவு பணி என தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோல், காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் இன்று தி.மு.க சார்பில் வழங்கப்பட்டன.

காரமடை பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், சானிடரி, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் குடும்பத்திற்குத் தேவையான அரிசி, காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்களையும் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் வழங்கினார்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எப்போதும் வெயிலில் பணியாற்றும் அவர்களுக்கு பழங்களும் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இருப்பினும் சுகாரதார பணியினை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பது துப்புரவு பணி என தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோல், காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் இன்று தி.மு.க சார்பில் வழங்கப்பட்டன.

காரமடை பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், சானிடரி, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் குடும்பத்திற்குத் தேவையான அரிசி, காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்களையும் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் வழங்கினார்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எப்போதும் வெயிலில் பணியாற்றும் அவர்களுக்கு பழங்களும் வழங்கப்பட்டன.