நீலகிரி: நீலகிரியில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுக்கடை இல்லாத விரக்தியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி: நீலகிரியில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுக்கடை இல்லாத விரக்தியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மதுக்கடை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மட்டுமே நடைபெறுகிறது.
இந்நிலையில், மதுக்கடை இல்லாத விரக்தியில் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு பந்தலூர் அடுத்த நெல்லியாளம் அம்மன் குண்ணு கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சேரம்படி காவல்துறைக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய ராஜ்குமார், விஸ்வநாத், அற்புத சாமி, பன்னீர்செல்வம், நாகராஜ், தீபக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் 1777 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 653 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மதுக்கடை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மட்டுமே நடைபெறுகிறது.
இந்நிலையில், மதுக்கடை இல்லாத விரக்தியில் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு பந்தலூர் அடுத்த நெல்லியாளம் அம்மன் குண்ணு கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சேரம்படி காவல்துறைக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய ராஜ்குமார், விஸ்வநாத், அற்புத சாமி, பன்னீர்செல்வம், நாகராஜ், தீபக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் 1777 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 653 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.