கோவை: கோவிட்-19 ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாத இறுதிவரை இலவச உணவு வழங்க கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கோவை: கோவிட்-19 ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாத இறுதிவரை இலவச உணவு வழங்க கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கோவை மாநகரில் கோவிட் –19 ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கடந்த சில தினங்களாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று முதல் இந்த மாத இறுதி வரை ஒவ்வொரு நாளும் 3500 உணவு பொட்டலங்களை தேவையானவர்களுக்கும், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தனியார் நிறுவனங்கள், காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு சங்க உறுப்பினர்கள் வழங்க உள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தேவையானோருக்கு இந்த நெருக்கடியான சமயத்தில் உதவுவதற்காகக் கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தினர் சார்பில் ஏப்ரல் மாத இறுதி வரை இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் செயலாளர் சிவக்குமார் தெரிவித்தனர்.
கோவை மாநகரில் கோவிட் –19 ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கடந்த சில தினங்களாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று முதல் இந்த மாத இறுதி வரை ஒவ்வொரு நாளும் 3500 உணவு பொட்டலங்களை தேவையானவர்களுக்கும், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தனியார் நிறுவனங்கள், காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு சங்க உறுப்பினர்கள் வழங்க உள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தேவையானோருக்கு இந்த நெருக்கடியான சமயத்தில் உதவுவதற்காகக் கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தினர் சார்பில் ஏப்ரல் மாத இறுதி வரை இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் செயலாளர் சிவக்குமார் தெரிவித்தனர்.