குன்னூர் தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் இலவசமாக 3 வேளையும் முட்டையுடன் கூடிய உணவு - குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர்

நீலகிரி: குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட அம்மா உணவகத்தில் 3 வேளையும் முட்டையுடன் கூடிய உணவு தனது சொந்த செலவில் இலவசமாக வழங்கப்படும் என்று குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு தெரிவித்துள்ளார்.

நீலகிரி: குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட அம்மா உணவகத்தில் 3 வேளையும் முட்டையுடன் கூடிய உணவு தனது சொந்த செலவில் இலவசமாக வழங்கப்படும் என்று குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு தெரிவித்துள்ளார். 

குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்திராமு அம்மா உணவகத்தை பார்வையிட்டு உணவு தயாரிக்கும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்கு சமைத்த மதிய உணவினை உண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 144 தடை உத்தரவு நீங்கும் வரை முட்டையுடன் கூடிய 3 வேளை உணவு வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தார். 

அதன்படி, குன்னூரில் உள்ள அம்மா உணவகத்தில் தினந்தோறும் 800க்கும் மேற்பட்டவர்கள் உணவு உண்டு செல்கின்றனர். மேலும், இதற்கு மேற்பட்டு எத்தனை பேர்கள் வந்தாலும் இலவசமாக உணவு உண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பால்வளத் தலைவர் எல்.மணி, நகர செயலாளர் டி. சரவணகுமார், நகர அவைத் தலைவர் நிர்மல் ஜெய்ன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் என். சேகர், முன்னால் கவுன்சிலர்கள் காேபி, உமா, அண்ணா வியாபாரிகள் சங்க செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...