நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அணைகளில் தண்ணீர் அளவு உயருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அணைகளில் தண்ணீர் அளவு உயருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு வழக்கம் போல் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்கி இடைவிடாமல் நான்கு மாதங்கள் பெய்தது. இதனால், தென்மேற்கு பருவமழையால், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இந்த தண்ணீர் கடந்த பிப்ரவரி மாதம் வரை இருந்தது.

ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தேயிலை மகசூல் குறைந்தும், மலை காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக சமவெளிப் பகுதிகளில் மின் தேவைக்காக அனைத்து நீர் மின் நிலையங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், முக்கிய அணைகளில் தண்ணீர் குறைந்து உள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பனியில் கருகி போன தேயிலை செடிகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. அதேபோல், மலைப்பகுதிகளில் கூட விவசாயிகள் காய்கறி விவசாயம் துவக்கிவிட்டனர். வறண்டு போயிருந்த அனைத்து நீர் நிலைகளிலும் தற்போது தண்ணீர் அளவு உயரத்துவங்கியுள்ளது
வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது. இதேபோன்று மேலும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் புல்வெளிகளில் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது.

அரசு தாவரவியல் பூங்காவில் புல்வெளிகள் பசுமை போர்த்தி காணப்படுகிறது ஆள் நடமாட்டம் இல்லாததால் புற்கள் நன்கு வளர்ந்துள்ளன.

மலர்கள் பூக்க தொடங்கி உள்ளதால் நீலகிரி முழுவதுமே இதமான காலநிலை காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு வழக்கம் போல் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்கி இடைவிடாமல் நான்கு மாதங்கள் பெய்தது. இதனால், தென்மேற்கு பருவமழையால், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இந்த தண்ணீர் கடந்த பிப்ரவரி மாதம் வரை இருந்தது.

ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தேயிலை மகசூல் குறைந்தும், மலை காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக சமவெளிப் பகுதிகளில் மின் தேவைக்காக அனைத்து நீர் மின் நிலையங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், முக்கிய அணைகளில் தண்ணீர் குறைந்து உள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பனியில் கருகி போன தேயிலை செடிகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. அதேபோல், மலைப்பகுதிகளில் கூட விவசாயிகள் காய்கறி விவசாயம் துவக்கிவிட்டனர். வறண்டு போயிருந்த அனைத்து நீர் நிலைகளிலும் தற்போது தண்ணீர் அளவு உயரத்துவங்கியுள்ளது
வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது. இதேபோன்று மேலும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் புல்வெளிகளில் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது.

அரசு தாவரவியல் பூங்காவில் புல்வெளிகள் பசுமை போர்த்தி காணப்படுகிறது ஆள் நடமாட்டம் இல்லாததால் புற்கள் நன்கு வளர்ந்துள்ளன.

மலர்கள் பூக்க தொடங்கி உள்ளதால் நீலகிரி முழுவதுமே இதமான காலநிலை காணப்படுகிறது.
