கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் முயற்சியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் முயற்சியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்லாமியர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் கொரோனா தொற்றின் அறிகுறிக்கான மருத்துவ பரிசோதனைகளை சுகாதாரத் துறையினர் அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து போத்தனூரிலுள்ள அரபு பள்ளி வாசலில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒத்துழைப்போடு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹீசேன் கூறியதாவது;-
இன்று நடைபெற்றுள்ள மருத்துவ பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு தொற்று இல்லை என தெரிவித்துள்ளது.
அதேபோல, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு அனைத்து ஜமாத் சார்பாக முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளனர்.
ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்ய வந்த மருத்துவக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி 13 நாட்கள் ஆவதாகவும், இவர்களுக்கு கொரொனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்து, இல்லையெனில், நோய் தொற்று இல்லை என மாவட்ட நிர்வாகம் அந்தந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்திடம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்கள் சார்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கொரோனா தொடர்பான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளுக்கு இஸ்லாமிய கூட்டமைப்புகளை அணுகினால் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு, இஸ்லாமிய இயக்கங்கள் முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்லாமியர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் கொரோனா தொற்றின் அறிகுறிக்கான மருத்துவ பரிசோதனைகளை சுகாதாரத் துறையினர் அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து போத்தனூரிலுள்ள அரபு பள்ளி வாசலில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒத்துழைப்போடு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹீசேன் கூறியதாவது;-
இன்று நடைபெற்றுள்ள மருத்துவ பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு தொற்று இல்லை என தெரிவித்துள்ளது.
அதேபோல, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு அனைத்து ஜமாத் சார்பாக முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளனர்.
ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்ய வந்த மருத்துவக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி 13 நாட்கள் ஆவதாகவும், இவர்களுக்கு கொரொனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்து, இல்லையெனில், நோய் தொற்று இல்லை என மாவட்ட நிர்வாகம் அந்தந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்திடம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்கள் சார்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கொரோனா தொடர்பான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளுக்கு இஸ்லாமிய கூட்டமைப்புகளை அணுகினால் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு, இஸ்லாமிய இயக்கங்கள் முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.