கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 968 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பொள்ளாச்சி, உலாந்தி மானாம்பள்ளி, அமராவதி, வால்பாறை, டாப்சிலிப் என 6 வனச்சரகங்கள் உள்ளடக்கிய வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, புள்ளிமான் என அபூர்வமான விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பக பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட தம்மம்பதி அருகில் உள்ள புங்கன் ஓடை மற்றும் போத்தமடை வன பகுதிகளில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் புலிகள் இறந்து கிடந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டு, வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதல் கட்ட உடற்கூறாய்வில் இறந்த காட்டுப் பன்றியின் உடலில் விஷம் வைத்துள்ளதாகவும், அதனை தின்ற புலி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சமீபகாலமாக வனத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களிலுள்ள கால்நடைகளை, புலி வேட்டையாடி கொன்றுள்ளதாக உரிமையாளர்கள் வனத்துறையினரிடம் புகாரளித்திருந்தனர். புலி தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடியதால் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், இரண்டு புலிகள் இறந்த சம்பவத்தில் பத்திரிகையாளர்களை வனத்துறையினர் அனுமதிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும், இரண்டு புலிகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலிகள் காப்பகத்திற்குள்ளே விஷம் வைத்து ஆண், பெண் புலி கொல்லப்பட்ட சம்பவம் அதிகாரிகளின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது… இதுகுறித்து தேசிய அளவிலுள்ள புலிகள் காப்பக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 968 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பொள்ளாச்சி, உலாந்தி மானாம்பள்ளி, அமராவதி, வால்பாறை, டாப்சிலிப் என 6 வனச்சரகங்கள் உள்ளடக்கிய வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, புள்ளிமான் என அபூர்வமான விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பக பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட தம்மம்பதி அருகில் உள்ள புங்கன் ஓடை மற்றும் போத்தமடை வன பகுதிகளில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் புலிகள் இறந்து கிடந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டு, வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதல் கட்ட உடற்கூறாய்வில் இறந்த காட்டுப் பன்றியின் உடலில் விஷம் வைத்துள்ளதாகவும், அதனை தின்ற புலி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சமீபகாலமாக வனத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களிலுள்ள கால்நடைகளை, புலி வேட்டையாடி கொன்றுள்ளதாக உரிமையாளர்கள் வனத்துறையினரிடம் புகாரளித்திருந்தனர். புலி தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடியதால் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், இரண்டு புலிகள் இறந்த சம்பவத்தில் பத்திரிகையாளர்களை வனத்துறையினர் அனுமதிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும், இரண்டு புலிகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலிகள் காப்பகத்திற்குள்ளே விஷம் வைத்து ஆண், பெண் புலி கொல்லப்பட்ட சம்பவம் அதிகாரிகளின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது… இதுகுறித்து தேசிய அளவிலுள்ள புலிகள் காப்பக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.