வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் பறிமுதல்

கோவை: வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மருந்து தெளித்து குழி தோண்டி புதைத்தனர்.

கோவை: வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மருந்து தெளித்து குழி தோண்டி புதைத்தனர். 

கோவை மாவட்டம் வால்பாறை மீன் மார்க்கெட்டில் சட்டத்திற்கு புறம்பாக ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் டாக்டர் பவன்ராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளர் சரவணபாபு வால்பாறை நகரில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுமார்க்கெட் பகுதியில் உள்ள ஜியோ என்பவரின் கடை சோதனையிடப்பட்டது.



இதில் ஒரு பெட்டி நிறைய ஓமன் நாட்டில் இருந்து ஊசி மூலம் பதப்படுத்தப்பட்ட மீனை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்டான்மோர் சந்திப்பில் ஒரு பெட்டி மீன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததும் மேலும், வீட்டில் 9 பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், 11 பெட்டிகளில் இருந்த மீன்களை பறிமுதல் செய்து, மருந்து தெளித்து பின்னர் குழி தோண்டி புதைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...