கோவை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;-
கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நலிவடைந்து சிரமப்படுகிற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இந்த ஊரடங்கு உத்தரவால் எந்த வித வருமானம் இன்றி தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கணக்கீட்டுப் பணி மேற்கொள்ளப்பட முடியாததால் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே, வரும் மாதத்திற்கு செலுத்த வேண்டுமென தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆனால், மார்ச் மாதத்தில், நிறுவனங்கள் முழுமையாக செயல்படவில்லை. நிறுவனங்கள் செயல்படாமல், மிகப் பெரிய தொகையை மின் கட்டணமாக, ஏப்., 20க்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, இந்நிறுவனங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தமிழக மின்சார வாரியம் தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு குதிரை சக்திக்கும் ( ஹார்ஸ் பவர் ) குறைந்த பட்ச தொகையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த பேரிடர் காலத்தில் , சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு, இந்த குறைந்த பட்ச தொகையை முழுமையாக நீக்குவது, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் எனவும் மின் கட்டணம் செலுத்த 6 மாத கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி இந்த தொழிற்சாலைகளை கடுமையான சரிவிலிருந்து மீட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, தொழில் கடன்களுக்கான வட்டியையும், மாதத் தவணையையும் ஜூன் மாதம் வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனால், நடைமுறையில் பல வங்கிகள் இந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லை. இந்த அறிவிப்பை கண்டிப்பாக செயல்படுத்த தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஊரடங்கு முடிந்த பிறகு தொழில்கள் சிரமமின்றி நடைபெற மூலதனக் கடனாக 25% நீண்ட கால கடனாகவும் வட்டியில்லாமலும் வழங்கவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறு மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;-
கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நலிவடைந்து சிரமப்படுகிற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இந்த ஊரடங்கு உத்தரவால் எந்த வித வருமானம் இன்றி தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கணக்கீட்டுப் பணி மேற்கொள்ளப்பட முடியாததால் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே, வரும் மாதத்திற்கு செலுத்த வேண்டுமென தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆனால், மார்ச் மாதத்தில், நிறுவனங்கள் முழுமையாக செயல்படவில்லை. நிறுவனங்கள் செயல்படாமல், மிகப் பெரிய தொகையை மின் கட்டணமாக, ஏப்., 20க்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, இந்நிறுவனங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தமிழக மின்சார வாரியம் தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு குதிரை சக்திக்கும் ( ஹார்ஸ் பவர் ) குறைந்த பட்ச தொகையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த பேரிடர் காலத்தில் , சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு, இந்த குறைந்த பட்ச தொகையை முழுமையாக நீக்குவது, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் எனவும் மின் கட்டணம் செலுத்த 6 மாத கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி இந்த தொழிற்சாலைகளை கடுமையான சரிவிலிருந்து மீட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, தொழில் கடன்களுக்கான வட்டியையும், மாதத் தவணையையும் ஜூன் மாதம் வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனால், நடைமுறையில் பல வங்கிகள் இந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லை. இந்த அறிவிப்பை கண்டிப்பாக செயல்படுத்த தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஊரடங்கு முடிந்த பிறகு தொழில்கள் சிரமமின்றி நடைபெற மூலதனக் கடனாக 25% நீண்ட கால கடனாகவும் வட்டியில்லாமலும் வழங்கவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறு மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.