கொரோனா பரவலை தடுக்க கிராம பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கும் விஜய் மக்கள் இயக்க இளைஞர்கள்..!

நீலகிரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து இன்று வரை தங்களது கிராம பகுதிகளை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் நடிகர் விஜய் மக்கள் இயக்க இளைஞர்களின் செயல்பாடு அந்த கிராமத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து இன்று வரை தங்களது கிராம பகுதிகளை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் நடிகர் விஜய் மக்கள் இயக்க இளைஞர்களின் செயல்பாடு அந்த கிராமத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

உதகை அருகே எமரால்டு பகுதியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் கிராமங்களை தூய்மையாகவும் விழிப்புணர்வுடன் இருக்க ஊரின் நுழைவு பகுதியில் சோதனை சாவடி அமைத்து வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப் படாதவாறு பாதுகாத்து வருகின்றனர்.

குறிப்பாக, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கபசுர குடிநீர் இரண்டு நாளுக்கு ஒரு முறை மற்றும் காலை, மாலை இருவேளை கிருமி நாசினி தெளித்து தங்கள் கிராம புறத்தை தூய்மையாக வைத்துள்ளனர் இந்த இளைஞர்கள்.

மேலும், தங்கள் கிராமப்பகுதி மட்டுமல்லாமல் பிற பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.



விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த இளைஞர்கள் முன்னெடுத்துவரும் செயல்பாடுகள் அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...