கோவை: வால்பாறையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: வால்பாறையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனருமான தெபா ஷுஷ் ஜானா, துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுறுத்தலின்படி தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகம் ஹைபாரஸ்ட் எஸ்டேட் காப்புக்காடு எல்லை பகுதியிலுள்ள தாய்முடி எஸ்டேட்டில் முள்ளம் பன்றியை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வனச்சரக அலுவலர் நட்ராஜ் அறிவுரையின்படி கல்லார் பிரிவு வனவர் ஷேக்உமர் தலைமையில் வனக்காப்பாளர் சதாம் உசேன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினரால் தணிக்கை மேற்கொண்ட போது வேட்டையாடிய முள்ளம் பன்றியை சமைத்துக் கொண்டிருந்த கெஜமுடி எஸ்டேட்டை சேர்ந்த சிவா(36), மாரியப்பன்(56), கண்ணன்(53) ஆகியோரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர்கள் மூவருக்கும் தலா 20 ஆயிரம் வீதம் அபராதம் விதித்துள்ளனர்.
வனத்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனருமான தெபா ஷுஷ் ஜானா, துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுறுத்தலின்படி தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகம் ஹைபாரஸ்ட் எஸ்டேட் காப்புக்காடு எல்லை பகுதியிலுள்ள தாய்முடி எஸ்டேட்டில் முள்ளம் பன்றியை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வனச்சரக அலுவலர் நட்ராஜ் அறிவுரையின்படி கல்லார் பிரிவு வனவர் ஷேக்உமர் தலைமையில் வனக்காப்பாளர் சதாம் உசேன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினரால் தணிக்கை மேற்கொண்ட போது வேட்டையாடிய முள்ளம் பன்றியை சமைத்துக் கொண்டிருந்த கெஜமுடி எஸ்டேட்டை சேர்ந்த சிவா(36), மாரியப்பன்(56), கண்ணன்(53) ஆகியோரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர்கள் மூவருக்கும் தலா 20 ஆயிரம் வீதம் அபராதம் விதித்துள்ளனர்.
வனத்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.