சென்னை: சென்னை முழுவதும் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் விரைவில் தொடங்கப்படஉள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை முழுவதும் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் விரைவில் தொடங்கப்படஉள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனில் பொதுமக்கள் சமூக விலகலைகடைபிடிக்க வைக்க வேண்டியதும் அவசியமாகும்.
இந்த நிலையில், சென்னை முழுவதும் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் விரைவில்தொடங்கப்பட உள்ளதாகவும் 5000 மூன்று சக்கர சைக்கிள்கள், 2000 சிறிய மோட்டார் வாகனங்கள்மூலம் விற்பனை செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் அடங்கிய தொகுப்பை உணவுடெலிவரி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டு உள்ளதாக சென்னை வளர்ச்சிகுழுமச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், காய்கறி தொகுப்பை 90256 53376, 044 2479113 என்ற எண்களில் சென்னை மக்கள் ஆர்டர்செய்யலாம் என்று சென்னை வளர்ச்சி குழும செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.