கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ந் தேதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 690 பேர் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனில் சமூக விலகலை கடைபிடிக்க வைக்கவேண்டியதும் அவசியமாகும். தற்போதைய சூழலில் கொரோனா தொற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டமார்ச் 24ம் தேதியுடன் ஒப்பிடும் போது மிக கடுமையாக பரவி உள்ளது. இன்னும் வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் மத்தியஅரசு, ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ந் தேதி முடிவு எடுக்கஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வரும் 11ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன்பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.