கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா டிரஸ்ட் வளாகத்தை கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி கொள்ள தமிழக அரசிற்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டாக்டர் பால்தினகரன் வழங்கியுள்ளார்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா டிரஸ்ட் வளாகத்தை கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி கொள்ள தமிழக அரசிற்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டாக்டர் பால்தினகரன் வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பராவமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்கள் சமூக விலகலை கடை பிடிக்க வேண்டி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காருண்யா டிரஸ்ட் வளாகத்தை கொரோனா வைரஸ் தாக்கும் நோயாளிகளை தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தி கொள்ள காருண்யா பல்கலைகழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கல்லூரியின் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்:-
உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் தேவையான வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென மத்திய மாநில அரசுகளுக்கு உதவும் விதமாக காருண்யா பல்கலை கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பால் தினகரன் அவர்கள்,, காருண்யா கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காருண்யா டிரஸ்ட் வளாகத்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர், தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளார்.
காருண்யா டிரஸ்ட் வளாகத்தில் 400 படுக்கை வசதிகள் ஆண், பெண்களுக்கென தனித்தனியாக நல்ல சூழலில் உள்ளதாகவும் மேலும் நல்ல வசதிகளுடன் உணவு கூடங்கள்அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு நோயாளிகள் நல்ல முறையில் பராமரிக்க வசதிகள் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.