திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா சோதனை செய்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா சோதனை செய்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி பாதையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் ஒருவர் நலமுடன் வீடு திரும்பிய நிலையில் 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தற்போது 939 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 7 இடங்கள் கொரோனா பாதுகாப்பு மண்டலங்களாக சீலிடப்பட்டு அதில் 99 ஆயிரத்து 700 வீடுகளில் உள்ள 4 லட்சம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.