கோவை: கோவையில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை: கோவையில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை மீறி ஊர் சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு, கைது மற்றும் நூதன தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் முக கவசம் அணியாமல் சாலையில் சென்ற 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய்கார்த்திக், ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த முத்தழகு, வைபவ், வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த அசோக், முகமது அஸ்லாம், கிருஷ்ணன் மோகன்தாஸ், சதீஷ்குமார், சுதீர் சர்மா ஆகிய 8 பேர் மீது காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்தனர். மேலும் 8 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், முக கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது கோவையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.