கோவை: கோவையில் இஸ்லாமியர்கள் மற்றும் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் இஸ்லாமியர்கள் மற்றும் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் என்பவர் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் மற்றும் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, புகாரின் பேரில் இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் என்பவர் மீது 505/2, 153/A என்ற இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.