கோவை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் அளித்த புகாரின் பேரில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் அளித்த புகாரின் பேரில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக முதல்வர் குறித்தும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் தவறாக சித்தரித்துப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையைச் சேர்ந்தவரை அவதூறு பரப்பியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை கரும்புக்கடையைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் ரியாஸ்கான்(22) முதலமைச்சர் குறித்து சமூக வலைதளம் மற்றும் செயலியில் அவதூறு பரப்பியதாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் கறுப்புக்குதிரை என்ற பெயரில் தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை பற்றி கேலி, கிண்டல் செய்து அவதூறாக கருத்துகளை பதிவிட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கறுப்புக்குதிரை என்ற பெயரில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இணையதள இன்ஜினியர் சுதர்சன்(22) எனத் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.