கோவை: கோவை சீஷா தொண்டு நிறுவனம் சார்பாக கல்லூரி மாணவர்கள் தயார் செய்த 150 லிட்டர் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கப்பட்டது.
கோவை: கோவை சீஷா தொண்டு நிறுவனம் சார்பாக கல்லூரி மாணவர்கள் தயார் செய்த 150 லிட்டர் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கப்பட்டது.
உலக நாடுகளில் பரவிவந்த கொரோனா இந்தியாவை அச்சுறுத்தத் துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை சீஷா தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிலையில், சீஷா சார்பாக 150 லிட்டர் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கப்பட்டது.
இது குறித்து சீஷா தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாமுவேல் தாமஸ் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முக கவசம், சானிடைசர், சோப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக எங்களது பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது சொந்த தயாரிப்பாக உலக சுகாதாரத்துறை விதிகளின் படி கைகளை சுத்தம் செய்யும் சானிட்டைசர்களை தயாரித்து வருவதாகவும், ஏற்கனவே மாநகராட்சி ஆணையரிடம் 100 லிட்டர் கிருமி நாசினி திரவம் வழங்கியுள்ளதாகவும், அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் 150 லிட்டர் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.