திருப்பூரில் வசிக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


திருப்பூர்: திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் பல்லடம் சாலையில் வித்யாலயா அருகில் சுண்டமெடு அம்பேத்கர் நகர் பகுதியில் திருநெல்வேலி, சிவகாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணிபுரிய வந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இங்கு ரேஷன் கார்டுகள் இல்லாத சூழலில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கையிருப்பில் இருந்த பொருட்கள் மற்றும் பணம் தீர்ந்து விட்ட சூழ்நிலையில் தற்போது உணவுக்கே வழி இல்லாமல் இருப்பதாகவும் ஆனால் அதிகாரிகள் எங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டி இன்று சுண்டமேடு பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மேலும், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆதாரங்கள் சொந்த ஊரில் இருக்கின்ற சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தற்போது அதை எடுத்து வர முடியாத சூழல் இருப்பதாகவும் அதுவரை மாவட்ட நிர்வாகம் எங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இல்லை என்றால் கொரோனா வந்து சாவதற்கு பதில் வறுமையில் செத்து விடுவோம் என்கிற சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...