திருப்பூரில் 6,45,920 ரேசன் கார்டுகளுக்கு நிவாரண தொகை விநியோகம் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், திருப்பூர் மாவட்டத்திற்கென கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனவும் திருப்பூரில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த மாநகராட்சிக்குள் மூன்று பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட கிருமிநாசினி பாதையினை மத்திய நிதியமைச்சர் பாராட்டியுள்ளார் எனவும் திருப்பூர் மாவட்டத்தில் 6,45,920 ரேசன் கார்டுகளுக்கு நிவாரண தொகை மற்றும் பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மீதமுள்ளவர்களுக்கு இம்மாத இறுதி வரை வழங்கப்படும் என்றார். 

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 1,28,665 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கண்டெடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க தயாராக இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...