நீலகிரியில் கொரோனா வைரஸ் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்காவலில் கண்காணிக்கப்பட்ட 1312 நபர்களில் 770 நபர்கள் முழு கண்காணிப்பு காலத்தை முழுமையாக முடித்துள்ளதாகவும் தற்போது 442 நபர்கள் மட்டுமே வீட்டு கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்காவலில் கண்காணிக்கப்பட்ட 1312 நபர்களில் 770 நபர்கள் முழு கண்காணிப்பு காலத்தை முழுமையாக முடித்துள்ளதாகவும் தற்போது 442 நபர்கள் மட்டுமே வீட்டு கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் நீலகிரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். 

நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்காவலில் கண்காணிக்கப்பட்ட 1312 நபர்களில் 770 நபர்கள் முழு கண்காணிப்பு காலத்தை முழுமையாக முடித்துள்ளதாகவும் தற்போது தொடர் கண்காணிப்பில் 442 நபர்கள் இருப்பதாகவும் அவர்களை சுகாதாரப் பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து வருவதாக கூறினார். 

மேலும், நூறு பேர் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கண்காணிப்பில் இருப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தில் டெல்லி மாநாடு சென்று வந்த 8 நபர்களில் நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் நான்கு பேர் இருப்பதாகவும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நான்கு நபர்கள் வசித்த பகுதியான காந்தல், குன்னூர், கோத்தகிரி பகுதிகள் சீல் வைக்கப்பட்டு முழு கண்காணிப்பில் இருப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் நோய் குறித்து அச்சப்படத் தேவையில்லை அனைத்தும் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...