நீலகிரி: குன்னூரில் காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குன்னூர் நகர பாஜக சார்பில் பாதபூஜை செய்து நன்றி செலுத்தினர்.
நீலகிரி: குன்னூரில் காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குன்னூர் நகர பாஜக சார்பில் பாதபூஜை செய்து நன்றி செலுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குன்னூர் நகர பாஜக சார்பில் அதன் தலைவர் குங்கும ராஜ் தலைமையில் நகரம் முழுவதும் ஆங்காங்கே கிருமி நாசினிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, நகர் பகுதியை சுற்றிலும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டது.

முன்னதாக, தூய்மைப் பணியாளர்கள் கால்களுக்கு மஞ்சள் நீரின் மூலம் கழுவி மலர்கள் பாேட்டு பூஜை செய்தனர். மேலும், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட செயலாளர் பாப்பண்ன் ஆகியாேர் முன்னிலை வகித்தனர். குன்னூர் நகர பொதுச் செயலாளர்கள் பாலாஜி, சரவணன், நகர துணைத் தலைவர் அனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.