கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கள் விற்பனை செய்த 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 90 லிட்டர் கள் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கள் விற்பனை செய்த 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 90 லிட்டர் கள் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர்.
மேலும், ஊரடங்கு உத்தரவுகளை மீறி மதுபானங்களை பதுக்கி கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குடிமகன்கள் கள்ளை அருந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையையும் மீறி மாவட்டம் முழுவதும் கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே குடிமகன்கள் கள் விற்பனை செய்யும் பகுதிகளை தேடிச்சென்று குடித்து வருகின்றனர்.
ஒரு லிட்டர் கள் 50 ரூபாய் என இருந்த நிலையில் மதுபானம் கிடைக்க பெறாத காரணத்தால் ஒரு லிட்டர் கள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் விற்பனை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து சென்று தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 22 லிட்டர் கள் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கள் விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, புறநகர் பகுதிகளான செட்டிபாளையம், காமநாயக்கன்பாளையம், சிறுமுகை மேட்டுபாளையம், தொண்டாமுத்தூர், அன்னூர் ஆகிய பகுதிகளில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 68 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர்.
மேலும், ஊரடங்கு உத்தரவுகளை மீறி மதுபானங்களை பதுக்கி கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குடிமகன்கள் கள்ளை அருந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையையும் மீறி மாவட்டம் முழுவதும் கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே குடிமகன்கள் கள் விற்பனை செய்யும் பகுதிகளை தேடிச்சென்று குடித்து வருகின்றனர்.
ஒரு லிட்டர் கள் 50 ரூபாய் என இருந்த நிலையில் மதுபானம் கிடைக்க பெறாத காரணத்தால் ஒரு லிட்டர் கள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் விற்பனை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து சென்று தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 22 லிட்டர் கள் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கள் விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, புறநகர் பகுதிகளான செட்டிபாளையம், காமநாயக்கன்பாளையம், சிறுமுகை மேட்டுபாளையம், தொண்டாமுத்தூர், அன்னூர் ஆகிய பகுதிகளில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 68 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.