கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டின் மாடியில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டின் மாடியில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று கோவை கணபதி சுபாஷ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தடையை மீறி ஜெபக்கூட்டம் நடத்துவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 15 பேர் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, பிரார்த்தனை நடத்திய பாதிரியார் ஜெபஸ்டின் அந்தோணிராஜ் மற்றும் மெர்சி ஜெபமாலை ராஜ் ஸ்டாலின் புதிய ராஜ் இயேசுதாஸ் ஆகியோர் மீது போலீசார் தடை உத்தரவை மீறி ஜெபக்கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று கோவை கணபதி சுபாஷ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தடையை மீறி ஜெபக்கூட்டம் நடத்துவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 15 பேர் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, பிரார்த்தனை நடத்திய பாதிரியார் ஜெபஸ்டின் அந்தோணிராஜ் மற்றும் மெர்சி ஜெபமாலை ராஜ் ஸ்டாலின் புதிய ராஜ் இயேசுதாஸ் ஆகியோர் மீது போலீசார் தடை உத்தரவை மீறி ஜெபக்கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.