கோவை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ள நிலையில், கோவையில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ள நிலையில், கோவையில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து பரிசோதித்த பின்னர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மளமளவென உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 485ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் ஆவர். மேலும் ஒருவர் துபாயிலிருந்து வந்தவர்.
இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 86 பேரில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 99 பேரை தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், கோவையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோவையில் கொரோனா பாதிப்பு 58ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பில் சென்னை(95) முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு(661) அடுத்த இடத்தில் தமிழ்நாடு(571) உள்ளது.
கோவையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 29 பேரில் 20 பேர் கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையில் 3 பேரும், அன்னூர் அரசு மருத்துவமனையில் 5 பேரும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து, இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து பரிசோதித்த பின்னர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மளமளவென உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 485ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் ஆவர். மேலும் ஒருவர் துபாயிலிருந்து வந்தவர்.
இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 86 பேரில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 99 பேரை தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், கோவையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோவையில் கொரோனா பாதிப்பு 58ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பில் சென்னை(95) முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு(661) அடுத்த இடத்தில் தமிழ்நாடு(571) உள்ளது.
கோவையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 29 பேரில் 20 பேர் கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையில் 3 பேரும், அன்னூர் அரசு மருத்துவமனையில் 5 பேரும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து, இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.