கோவை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பாக கொரோனா வைரஸ் முதல்வர் பொது நிவாரண நிதியாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது
கோவை: கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நோயை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டு நன்கொடைகள் பெறப்படுகிறது. இதற்கு தனிநபர்கள்,அரசியல் கட்சிகள்,தொழில் நிறுவனங்கள்,என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பாக பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணியிடம் இன்று வழங்கப்பட்டது.
இதில் மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜான் ஜோசப்,மறை மாவட்ட முதன்மை குரு மை ஜார்ஜ் தனசேகர்,மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் சமூக சேவா சங்க இயக்குனர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பிஷப் தாமஸ் அக்குவைனஸ் கூறுகையில், கோவை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட 74 ஆலயங்களிலும் அந்தந்த அருட்தந்தையர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் வழங்கி வருவதாகவும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டு நன்கொடைகள் பெறப்படுகிறது. இதற்கு தனிநபர்கள்,அரசியல் கட்சிகள்,தொழில் நிறுவனங்கள்,என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பாக பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணியிடம் இன்று வழங்கப்பட்டது.
இதில் மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜான் ஜோசப்,மறை மாவட்ட முதன்மை குரு மை ஜார்ஜ் தனசேகர்,மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் சமூக சேவா சங்க இயக்குனர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பிஷப் தாமஸ் அக்குவைனஸ் கூறுகையில், கோவை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட 74 ஆலயங்களிலும் அந்தந்த அருட்தந்தையர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் வழங்கி வருவதாகவும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.