வடமாநில இளைஞர்களை வேறு இடத்திற்க்கு மாற்ற வேண்டும். உப்பிலிபாளையம் பகுதி மக்கள் கோரிக்கை.

வடமாநில இளைஞர்களை வேறு இடத்திற்க்கு மாற்ற வேண்டும். உப்பிலிபாளையம் பகுதி மக்கள் கோரிக்கை.



கோவை: கொரோனா தொற்று பராவமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சாலையில் சுற்றி திரிபவர்கள்,

கைவிடப்பட்டவர்களை, அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளது.

இந்நிலையில் தங்க இடமின்றி சுற்றி திரிந்த வடமாநில இளைஞர்களை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கபட்டு உள்ளனர். இங்கு தங்க வைக்கபட்டு உள்ள வடமாநில இளைஞர்கள் அப்பகுதி மக்களுக்கு தொந்தரவுகள் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர்களை அங்கிருந்து மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.

கூட்டமாக செல்ல அனுமதி மறுக்கபட்டதால், அவர்கள் சார்பாக ஒருவரை மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 

வடமாநில இளைஞர்கள் செய்யும் இடையூறுகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியரை தொடர்பு கொண்டு பேசினார்.வடமாநில இளைஞர்கள் இன்று இரவுக்குள் வேறு இடதிற்க்கு மாற்றம் செய்யபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...