கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டிற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க எம்எல்ஏ நா.கார்த்திக் மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவி!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டிற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க திமுக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேலும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நா.கார்த்திக் வழங்கினார்.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டிற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க திமுக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேலும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நா.கார்த்திக் வழங்கினார்.

கொரோனா அச்சுறுத்தலை சந்தித்து வரும் வேளையில் கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என திமுக எம்பி, எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.

இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு, திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் எம்எல்ஏ, தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஏற்கனவே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டிற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோசலையை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக தலைவர் அறிவுறுத்தலின்படி கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா வார்டின் மருந்துவ உபகரணங்கள் வாங்க இதுவரை 30 லட்சம் ரூபாய் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளதாகவும் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வறுமையில் வாடும் ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதாக தெரிவித்தார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...