கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருப்பூரில் கிருமி நாசினி சுரங்கத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், திருப்பூரில் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி சுரங்கத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

காய்கறிகள் வாங்க வரும் அனைவரும் இந்த கிருமி நாசினி சுரங்கத்துக்குள் நுழைந்து சென்றுதான் காய்கறிகளை வாங்க முடியும். பொதுமக்கள் தங்கள் கைகளைக் கழுவியபின் இந்த கிருமி நாசினி சுரங்கத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும். அவர்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...