சென்னை: கொரோனா அறிகுறி இருந்தால் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா அறிகுறி இருந்தால் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 102 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய் தொற்று எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை ஒன்று தான் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், நல்ல விஷயம் என்னவென்றால், நோயாளிகள் அனைவருமே நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்கள் என்றும், யாருக்குமே ஐசியூ சிகிச்சை கூட தேவைப்படவில்லை என அவர் கூறியுள்ளார். அதனால் கொரோனா பயப்படக்கூடிய நோய் இல்லை என்றும், தொற்று ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்துவிடலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல, தமிழகத்தில் சமூக பரவல் என்ற நிலை ஏற்படவில்லை எனவும் வைரஸ் பாதிப்பு இரண்டாவது கட்டத்தில்தான் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை சோதனை செய்து நெகட்டிவ் என்று வந்துவிட்டால் மறுபடி பாசிட்டிவ் என்று வராது என்று அர்த்தம் கிடையாது. மறுநாளே கூட பாசிட்டிவ் ஏற்படலாம். எனவேதான் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பதற்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி வருவதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 102 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய் தொற்று எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை ஒன்று தான் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், நல்ல விஷயம் என்னவென்றால், நோயாளிகள் அனைவருமே நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்கள் என்றும், யாருக்குமே ஐசியூ சிகிச்சை கூட தேவைப்படவில்லை என அவர் கூறியுள்ளார். அதனால் கொரோனா பயப்படக்கூடிய நோய் இல்லை என்றும், தொற்று ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்துவிடலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல, தமிழகத்தில் சமூக பரவல் என்ற நிலை ஏற்படவில்லை எனவும் வைரஸ் பாதிப்பு இரண்டாவது கட்டத்தில்தான் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை சோதனை செய்து நெகட்டிவ் என்று வந்துவிட்டால் மறுபடி பாசிட்டிவ் என்று வராது என்று அர்த்தம் கிடையாது. மறுநாளே கூட பாசிட்டிவ் ஏற்படலாம். எனவேதான் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பதற்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி வருவதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.