கோவை: கோவையில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் ஊழியரை தாக்கிய வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் ஊழியரை தாக்கிய வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் ரேசன் கடை எண்:33. இதில் மதுக்கரை மார்கெட் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி ரேசன் கடையில் தற்காலிக பொருட்கள் வழங்கும் பணியில் உள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ரபியாதுல் பஸ்ரியா பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
அப்போது, பொருட்களை விநியோகம் செய்வதில் எழுந்த பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ரபியதுல் பஸ்ரியா கடை ஊழியரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாக்கியலட்சுமி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, ரபியதுல் பஸ்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் ரேசன் கடை எண்:33. இதில் மதுக்கரை மார்கெட் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி ரேசன் கடையில் தற்காலிக பொருட்கள் வழங்கும் பணியில் உள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ரபியாதுல் பஸ்ரியா பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
அப்போது, பொருட்களை விநியோகம் செய்வதில் எழுந்த பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ரபியதுல் பஸ்ரியா கடை ஊழியரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாக்கியலட்சுமி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, ரபியதுல் பஸ்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.