திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்ஷெட் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்ஷெட் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக நேற்று முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், சரக்கு ரயில்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று சுகாதாரத் துறை அலுவலர்களால் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவர்களின் உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. இதேபோல, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே போலீசாருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், பணியாளர்கள் அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களால் வலியுறுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக நேற்று முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், சரக்கு ரயில்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று சுகாதாரத் துறை அலுவலர்களால் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவர்களின் உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. இதேபோல, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே போலீசாருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், பணியாளர்கள் அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களால் வலியுறுத்தப்பட்டது.