திருப்பூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் விளம்பரம் செய்துவருவதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் விளம்பரம் செய்துவருவதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின் விளக்குகளை அணைப்பதன் மூலமும், அகல்விளக்கை ஏற்றுவதன் மூலமும் அறிவியல் பூர்வமான காரணம் உண்டா என்பதை பிரதமர் விளக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்சின் தலைவர் அல்ல, அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டிய இந்தியாவின் பிரதமர். நாடாளுமன்றத்தைப் புதுப்பிக்க 20 ஆயிரம் கோடி, 130 கோடி மக்களுக்கு நோய்தொற்று தவிர்க்க 15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது போதுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அனைத்துக்கட்சி ஆலோசனை தேவையில்லை என முதல்வர் தெரிவித்திருப்பது சரியில்லை எனவும் இப்போது தமிழகம் கொரோனா தொற்றில் 2வது இடம் வந்திருப்பதாகவும், ரேசன் கடைகளில் அதிமுக, பாஜக கட்சிகளின் தலையீடு, ரேசன் கடை முன்பு அதிமுக பேனர் வைத்து அரசியல் விளம்பரம் செய்துவருகிறார்கள். இதுகுறித்து புகார் அறிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நான் அழைத்தும் தாசில்தார் அழைப்பை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதேபோல, மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரையும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதில்லை எனவும் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன். பதில் இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அத்துமீறல்கள் உள்ளதால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதுபோல சர்வ கட்சி குழு அமைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின் விளக்குகளை அணைப்பதன் மூலமும், அகல்விளக்கை ஏற்றுவதன் மூலமும் அறிவியல் பூர்வமான காரணம் உண்டா என்பதை பிரதமர் விளக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்சின் தலைவர் அல்ல, அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டிய இந்தியாவின் பிரதமர். நாடாளுமன்றத்தைப் புதுப்பிக்க 20 ஆயிரம் கோடி, 130 கோடி மக்களுக்கு நோய்தொற்று தவிர்க்க 15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது போதுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அனைத்துக்கட்சி ஆலோசனை தேவையில்லை என முதல்வர் தெரிவித்திருப்பது சரியில்லை எனவும் இப்போது தமிழகம் கொரோனா தொற்றில் 2வது இடம் வந்திருப்பதாகவும், ரேசன் கடைகளில் அதிமுக, பாஜக கட்சிகளின் தலையீடு, ரேசன் கடை முன்பு அதிமுக பேனர் வைத்து அரசியல் விளம்பரம் செய்துவருகிறார்கள். இதுகுறித்து புகார் அறிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நான் அழைத்தும் தாசில்தார் அழைப்பை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதேபோல, மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரையும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதில்லை எனவும் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன். பதில் இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அத்துமீறல்கள் உள்ளதால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதுபோல சர்வ கட்சி குழு அமைத்திட வேண்டும் என தெரிவித்தார்.