கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் வெளியூர்களுக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரானா பரிசோதனை நடைபெற்றது.
கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் வெளியூர்களுக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரானா பரிசோதனை நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழகத்தை சேர்ந்த பல மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தவர்கள் தேயிலை தோட்டங்களிலும் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஒரு சிலர் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கொரானா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, வால்பாறை பகுதிக்கு கடந்த சில வாரங்களில் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள், கேரளாவிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது.

அதன்படி, பட்டியலில் உள்ள 25 பேர்களுக்கு இன்று வால்பாறை அரசு மருத்துவ மணைக்கு வரவழைக்கப்பட்டு அரசு தலைமை மருத்துவர் வினோத் தலைமையிலான கொரானா தடுப்பு குழுவினர் மூலம் அவர்களுக்கு கொரானா அறிகுறி உள்ளதா என்று பரிசோதனை நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழகத்தை சேர்ந்த பல மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தவர்கள் தேயிலை தோட்டங்களிலும் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஒரு சிலர் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கொரானா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, வால்பாறை பகுதிக்கு கடந்த சில வாரங்களில் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள், கேரளாவிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது.

அதன்படி, பட்டியலில் உள்ள 25 பேர்களுக்கு இன்று வால்பாறை அரசு மருத்துவ மணைக்கு வரவழைக்கப்பட்டு அரசு தலைமை மருத்துவர் வினோத் தலைமையிலான கொரானா தடுப்பு குழுவினர் மூலம் அவர்களுக்கு கொரானா அறிகுறி உள்ளதா என்று பரிசோதனை நடைபெற்றது.