கொரோனா தொற்று உள்ளதாக தன் மீது வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் புலிகள் கட்சி கிளை செயலாளர் புகார் மனு

கோவை: கொரோனா தொற்று உள்ளதாக தன் மீது வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சி கிளை செயலாளர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை: கொரோனா தொற்று உள்ளதாக தன் மீது வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சி கிளை செயலாளர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தமிழ் புலிகள் கட்சியின் பாப்பம்பட்டி காந்தி நகர் பகுதி கிளை செயலாளராக உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறினார். 

இந்த நிலையில், வெறுப்பின் காரணமாக சிலர் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வாட்ஸ் அப்பில் வதந்தியை பரப்பி வருவதாகவும் இதனால் தானும் தன் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும், வதந்தி காரணமாக ஊர் பொதுமக்கள் பொது இடங்களில் நடமாட தடை விதித்து உள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்த அவர், தன் மீது அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...