கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்ட மது விற்பனை கூடத்திற்கு சீல்; ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல்

கோவை: கோவை அடுத்த கணபதி சங்கனூர் சாலையில் மதுபானக்கடையின் பின்புறம் சட்டவிரோதமாக செயல்பட்ட மது விற்பனை கூடத்தை சீல் வைத்த அதிகாரிகள் அங்கிருந்த 75 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை: கோவை அடுத்த கணபதி சங்கனூர் சாலையில் மதுபானக்கடையின் பின்புறம் சட்டவிரோதமாக செயல்பட்ட மது விற்பனை கூடத்தை சீல் வைத்த அதிகாரிகள் அங்கிருந்த 75 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கோவை கணபதி சங்கனூர் சாலையில் செயல்படும் மதுபான கடை எண் 1599ன் பின்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு புகார் வந்தது. 



இதனையடுத்து, வடக்கு வட்டாட்சியர் மகேஸ் தலைமையிலான குழுவினர் சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்ற தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் சோதனை செய்தனர். அப்போது, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக மதுபானங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 



இதனையடுத்து, 75000 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட பார் உரிமையாளர் பரமசிவம், செல்வம், சேகர், செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...