கோவை: கோவை அடுத்த குனியமுத்தூரில் குளத்தில் துணி துவைத்து கொண்டு இருந்தவர் முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அடுத்த குனியமுத்தூரில் குளத்தில் துணி துவைத்து கொண்டு இருந்தவர் முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(66). பூக்கள் அலங்கரிக்கும் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று குறிச்சி குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராமச்சந்திரனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(66). பூக்கள் அலங்கரிக்கும் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று குறிச்சி குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராமச்சந்திரனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.