கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து தோப்புக்கரணம் போட செய்த போலீசார்!

கோவை: கோவை காந்திபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனாவசியமான சுற்றித்திரிந்தவர்களை பிடித்த போலீசார் அவர்களை நூதன முறையில் தோப்புக்கரணம் போட வைத்தது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை: கோவை காந்திபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனாவசியமான சுற்றித்திரிந்தவர்களை பிடித்த போலீசார் அவர்களை நூதன முறையில் தோப்புக்கரணம் போட வைத்தது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதனால் அனாவசியமாக யாரும் சாலையில் பயணிக்க கூடாது எனவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் நாடு முழுவதும் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு காவல் ஆய்வாளர் முத்துமாலை தலைமையிலான குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் அனாவசியமாக சாலையில் பயணித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் தேவையற்ற பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் 144 தடை உத்தரவை மீறியதால் நூதன முறையில் தோப்புக்கரணம் போடவைத்தனர்.

இந்த நூதன முறையிலான தண்டனை கட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...