கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, வால்பாறை நகரம் மட்டுமின்றி தேயிலை தோட்டப்பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக வால்பாறை நகரில் அதிகம் மக்கள் வந்து செல்லும் பிரதான சாலையில் உள்ள மளிகை, காய்கறி கடை பகுதிகளில் உள்ள கடைகளின் கதவுகள் கைப்பிடிகள் மீது அதிக சக்தி வாய்ந்த தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், சாலைகளில் வரும் இரு சக்கர வாகனம், கார், டெம்போக்கள் மீது கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு கிருமி நாசினி அடிக்கும் பணியினை மேற்கொண்டனர்.
இதேபோல, வால்பாறை நகரம் மட்டுமின்றி தேயிலை தோட்டப்பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக வால்பாறை நகரில் அதிகம் மக்கள் வந்து செல்லும் பிரதான சாலையில் உள்ள மளிகை, காய்கறி கடை பகுதிகளில் உள்ள கடைகளின் கதவுகள் கைப்பிடிகள் மீது அதிக சக்தி வாய்ந்த தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், சாலைகளில் வரும் இரு சக்கர வாகனம், கார், டெம்போக்கள் மீது கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு கிருமி நாசினி அடிக்கும் பணியினை மேற்கொண்டனர்.