கோவை: கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை என மொத்தம் இரண்டு காவல் எல்லைகளிலும் 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 595 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை என மொத்தம் இரண்டு காவல் எல்லைகளிலும் 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 595 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் ஆங்காங்கே வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி போலீசார் தற்போது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகரில் 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 33 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோவை புறநகரில் 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் ஆங்காங்கே வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி போலீசார் தற்போது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகரில் 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 33 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோவை புறநகரில் 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.