கோவை: கோவை சூலூர் அருகே விற்பனை நேரம் முடிந்து பெட்ரோல் கேட்டு, பங்க் ஊழியரை தாக்கிய சர்க்கிள் ரைட்டரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
கோவை: கோவை சூலூர் அருகே விற்பனை நேரம் முடிந்து பெட்ரோல் கேட்டு, பங்க் ஊழியரை தாக்கிய சர்க்கிள் ரைட்டரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
சூலூர் சர்க்கிள் ரைட்டராக பணியாற்றி வருபவர் மாதப்பன். இவர் நேற்று சாதாரண உடையில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மாலை நான்கு மணியளவில் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அசோக்ராஜா மதியம் இரண்டரை மணியோடு விநியோகம் முடிந்து விட்டது எனவும் சாவிகளை உரிமையாளர் எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார்.
அப்போது, சர்க்கிள் ரைட்டர் மாதப்பன் தான் போலீஸ் என தெரிவித்து, பெட்ரோல் தர மறுக்கிறாயா என மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அசோக்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கு அவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அசோக்ராஜிக்கு கை முறிவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாதப்பனை ஆயுதப் படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.
சூலூர் சர்க்கிள் ரைட்டராக பணியாற்றி வருபவர் மாதப்பன். இவர் நேற்று சாதாரண உடையில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மாலை நான்கு மணியளவில் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அசோக்ராஜா மதியம் இரண்டரை மணியோடு விநியோகம் முடிந்து விட்டது எனவும் சாவிகளை உரிமையாளர் எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார்.
அப்போது, சர்க்கிள் ரைட்டர் மாதப்பன் தான் போலீஸ் என தெரிவித்து, பெட்ரோல் தர மறுக்கிறாயா என மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அசோக்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கு அவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அசோக்ராஜிக்கு கை முறிவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாதப்பனை ஆயுதப் படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.