திருவனந்தபுரம்: கேரளாவின் பால் கொள்முதல் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவின் பால் கொள்முதல் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
இது குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் 1,80,000 லிட்டர் பால் மிச்சமாகிறது. இதையடுத்து, கேரளாவில் மிச்சமாகும் பாலை வாங்கிக் கொள்ள முடியுமா என்று தமிழக அரசிடம் கேட்டிருந்தோம். இதை பரிசீலிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், தினமும் கேரளாவில் இருந்து 50,000 லிட்டர் பாலை வாங்கிக் கொள்வதாக ஈரோடு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு பால் பவுடர் தயாரிக்க இந்த பால் வாங்கப் படுகிறது. கேரளாவின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் 1,80,000 லிட்டர் பால் மிச்சமாகிறது. இதையடுத்து, கேரளாவில் மிச்சமாகும் பாலை வாங்கிக் கொள்ள முடியுமா என்று தமிழக அரசிடம் கேட்டிருந்தோம். இதை பரிசீலிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், தினமும் கேரளாவில் இருந்து 50,000 லிட்டர் பாலை வாங்கிக் கொள்வதாக ஈரோடு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு பால் பவுடர் தயாரிக்க இந்த பால் வாங்கப் படுகிறது. கேரளாவின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.