கோவை: மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினியை(Hand Sanitizer) காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் வேதியாளர்கள் மற்றும் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோவை: மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினியை(Hand Sanitizer) காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் வேதியாளர்கள் மற்றும் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினியை (Hand Sanitizer) காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் வேதியாளர்கள் மற்றும் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டு கோவை மாநகர சுகாதார அலுவலர்களிடம் சுமார் 100 லிட்டர் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
மேலும் சாடிவயல், மத்துவராயபுரம், நல்லுர்ப்பதி, சின்னாறு சோதனை சாவடி, போன்ற கிராமங்களில் கிருமிநாசினி தெளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல, சீஷா முதியோர் இல்ல பயனாளிகள் மூலம் முகமூடி(face mask) தயாரிக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி செய்யப்பட்டன. இந்த நல்ல முயற்சியில் காருண்யா பல்கலைக்கழக தன்னார்வலர்கள், சீஷா தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினியை (Hand Sanitizer) காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் வேதியாளர்கள் மற்றும் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டு கோவை மாநகர சுகாதார அலுவலர்களிடம் சுமார் 100 லிட்டர் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
மேலும் சாடிவயல், மத்துவராயபுரம், நல்லுர்ப்பதி, சின்னாறு சோதனை சாவடி, போன்ற கிராமங்களில் கிருமிநாசினி தெளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல, சீஷா முதியோர் இல்ல பயனாளிகள் மூலம் முகமூடி(face mask) தயாரிக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி செய்யப்பட்டன. இந்த நல்ல முயற்சியில் காருண்யா பல்கலைக்கழக தன்னார்வலர்கள், சீஷா தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.