கோவை: தமிழகத்தில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன்களை அதிமுகவினர் விநியோகிக்காமல் அரசு அலுவலர்கள் மூலம் விநியோகிக்க வேண்டும் என கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக வை சேர்ந்த நா. கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன்களை அதிமுகவினர் விநியோகிக்காமல் அரசு அலுவலர்கள் மூலம் விநியோகிக்க வேண்டும் என கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக வை சேர்ந்த நா. கார்த்திக் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் எந்த பணியினையும் மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் கூலித்தொழிலாளர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதுக்குறித்து கோவை திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும வழங்கப்படும் தொகையினை நியாய விலைகடைகளில் பெறுவதற்கு முன்னர் கோவையில் வீடு வீடாக சென்று அதிமுக கட்சியினர் அதற்கான டோக்கன்களை வழங்கி வருகின்றனர். இது முறையான செயலாக இருக்காது, என கருத்தினை தெரிவித்தார்.
மேலும், இந்த கொரோனா நிவாரணம் என்பது அரசு அலுவலர்கள் மூலமாக விநியோகிக்காமல் ஒரு கட்சி சார்பில் உள்ளவர்களை வைத்து செயல்படுத்த முயற்சிப்பது பலவித முறைகேடுகள் நடக்க வழிவகிக்கும் என திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிக்கு டோக்கன் விநியோகம் செய்வதை ஆளுங்கட்சியான அதிமுகவினர் மூலமாக விநியோகிக்காமல், அரசு அலுவலர்கள் மூலம் விநியோகிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் எந்த பணியினையும் மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் கூலித்தொழிலாளர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதுக்குறித்து கோவை திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும வழங்கப்படும் தொகையினை நியாய விலைகடைகளில் பெறுவதற்கு முன்னர் கோவையில் வீடு வீடாக சென்று அதிமுக கட்சியினர் அதற்கான டோக்கன்களை வழங்கி வருகின்றனர். இது முறையான செயலாக இருக்காது, என கருத்தினை தெரிவித்தார்.
மேலும், இந்த கொரோனா நிவாரணம் என்பது அரசு அலுவலர்கள் மூலமாக விநியோகிக்காமல் ஒரு கட்சி சார்பில் உள்ளவர்களை வைத்து செயல்படுத்த முயற்சிப்பது பலவித முறைகேடுகள் நடக்க வழிவகிக்கும் என திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிக்கு டோக்கன் விநியோகம் செய்வதை ஆளுங்கட்சியான அதிமுகவினர் மூலமாக விநியோகிக்காமல், அரசு அலுவலர்கள் மூலம் விநியோகிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.