கோவை: ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் மேட்டுப்பாளையம் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களிடம் இனி வீட்டினை விட்டு வெளியே வர மாட்டேன் என உறுதிமொழி எடுக்கவைத்த காவல்துறையினர்.
கோவை: ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் மேட்டுப்பாளையம் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களிடம் இனி வீட்டினை விட்டு வெளியே வர மாட்டேன் என உறுதிமொழி எடுக்கவைத்த காவல்துறையினர்.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் விளைவுகள் தெரியாமல் தேவையின்றி பலர் வெளியே செல்லும் நிலை நீடித்து தான் வருகிறது.

அவ்வாறு ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் மேட்டுப்பாளையம் சாலைகளில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி வந்த 30 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களின் தேவையின்றி சாலையில் இனிமேல் நடமாட மாட்டேன் என உறுதி மொழி எடுக்க வைத்த பின்னர் அனுப்பிவைத்தனர்.
மேலும், கொரோனா தொற்று பரவும் விதம் மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதுவரை தடையை மீறி வாகனங்களில் சென்றதாக 140 வழக்குகள் மேட்டுப்பாளையம் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் விளைவுகள் தெரியாமல் தேவையின்றி பலர் வெளியே செல்லும் நிலை நீடித்து தான் வருகிறது.

அவ்வாறு ஊரடங்கு உத்தரவினை மதிக்காமல் மேட்டுப்பாளையம் சாலைகளில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி வந்த 30 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களின் தேவையின்றி சாலையில் இனிமேல் நடமாட மாட்டேன் என உறுதி மொழி எடுக்க வைத்த பின்னர் அனுப்பிவைத்தனர்.
மேலும், கொரோனா தொற்று பரவும் விதம் மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதுவரை தடையை மீறி வாகனங்களில் சென்றதாக 140 வழக்குகள் மேட்டுப்பாளையம் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.