கோவை: கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியைச்சேர்ந்தவர் ஜாபர் அலி. அவர் இன்று மாலை 5 மணியளவில் ஆத்துப்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார், அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் சென்றுள்ளார்.
கோவை: கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியைச்சேர்ந்தவர் ஜாபர் அலி. அவர் இன்று மாலை 5 மணியளவில் ஆத்துப்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார், அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவரை பின்தொடர்ந்த காவல் துறையினர் புட்டு விக்கி பாலம் அருகே அவரை மடக்கி பிடித்தனர்.
காவல்துறை விசாரணையில் அவர் தான் காவலர் செய்தி என்ற இதழில் நிருபராக பணியாற்றி வருவதாகவும், போலீஸ் நியூஸ் மீடியாவில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் எல்வழக்கு பதிவு செய்து ஜெ எம் 7 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.