கோவை: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் பொதுமக்கள் நடமாட்டம் குறையாததால் கோவையில் துணை ராணுவம் இறங்கியுள்ளதாக வாட்ஸ் அப்பில் பரவும் தவறான வீடியோ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் பொதுமக்கள் நடமாட்டம் குறையாததால் கோவையில் துணை ராணுவம் இறங்கியுள்ளதாக வாட்ஸ் அப்பில் பரவும் தவறான வீடியோ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் ஆங்காங்கே வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்களை கட்டுபடுத்த கோவைக்கு துணை ராணுவம் வர உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று துணை ராணுவ படையினர், கோவை மாநகருக்குள் ஊர்வலமாக வருவதாக பழைய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வீடியோ சி ஏ ஏ போராட்டத்தின் தொடர்ச்சியில் கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் அதிவிரைவு படையினர் ஊர்வலமாக வந்த வீடியோ என தெரியவந்துள்ளது.
மேலும், இதுபோன்ற தவறான வீடியோக்கள் பரப்பப்படுவது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்துவதால் வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.